பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

உயர்நிலைப்பள்ளி நூலகம்


ஒரு நூலைக் கொடுப்பதற்கு முன்னர் அந்நூலின் தரத்தைப் பார்த்தல் வேண்டும். அந்த நூல் எல்லோரும் விரும்பிப் படிக்கக் கூடியதாகவும், அரிதாகக் கிடைக்க வல்லதாகவும், தற்போது அச்சில் இல்லாததாகவும் இருந்தால் வெளியே தராமல் இருத்தல் மிகமிக நலம். ஏனெனில் ஒரு சிலர் இத்தகைய நூல்களை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டுப் பல நாள் கழித்துத் தொலைந்து விட்டதாகக் கூறிப் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இன்னும் சிலர் பேராசை காரணமாக இருபது முப்பது நூல்களை வாங்கிக்கொண்டு சென்று தாமும் படிக்காமல் பிறரையும் படிக்கவிடாமல் விட்டில் போட்டு விடுவதுண்டு. இவற்றை எல்லாம் நூலகத்தலைவர் நூல் தருகையில் மனத்திற் கொள்ள வேண்டும். பெரிய வகுப்பு மாணவர்க்குச் சிறிய வகுப்பு மாணவரைவிட ஓரிரு நூல்கள் அதிகம் தரலாம். இதற்கு மூன்று விதமான பேரேடுகள் வைத்துக்கொள்ளல் நலமாகும். அவற்றில் பெயர், வகுப்பு எண், வகுப்பு, நூலின் பெயர், நாள் ஆகியன குறிப்பிடப்பட வேண்டும். நூல் கொடுக்க வாங்கத் தனியான அட்டைகள் எடுப்பார்க்குத் தருவது இன்றியமையாததாகும். இந்த அட்டையின் தலைப்பில் எண், பெயர், வகுப்பு, முகவரி ஆகியன பதியப்பட வேண்டும். கீழே குறிப்பெண், திருப்பித்தர வேண்டிய நாள், தந்த நாள் ஆகியன குறிப்பிட இடம் விடவேண்டும்.

ஒவ்வொரு நூலிலும் ஓர் 'நூல் பை' (Book Pocket), நாள் காட்டி அல்லது நாள் சீட்டு (Date Slip) ஆகியன ஒட்டப்பட்டிருக்கும். நூல் பையினுள் ஒர் அட்டை இருக்கும். அது 'நூல் அட்டை' (Book Card) எனப்படும். அதன் அளவு 4"- 2" ஆகும். அதில் குறிப்பெண், பதிவெண், நூலின் பெயர், ஆசிரியரின் பெயர் ஆகியன எழுதப்பட்டிருக்கும். நாள் காட்டியில் பதிவெண், குறிப்பெண் இருக்கும். அதில் திருப்பித்தர வேண்டிய நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். நாள் காட்டி அட்டைக்கு அடுத்த பக்கத்திலும், நூல்பை