பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை


ஆரம்ப சேதனப் பொருள்களிலிருந்து பிறந்த கூட்டுப் பொருள்கள், அவற்றிலிருந்து புரோட்டோ புரதங்கள், கோயசர்வேட்டுகளிலிருந்து உயிர்பரிணமிப்பதை விரிவாக ஓபாரின் இதில் விளக்கியுள்ளார். முதலில் தோன்றிய உயிரினங்கள் குறித்தும் தனது ஆய்வுரையை வழங்கியுள்ளார்.

இது, பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் உயிரின் தோற்றம் குறித்துப் பல முறை வாசிக்க வேண்டிய நூலாகும். இந்நூலினை தலைசிறந்த தமிழ் ஆய்வறிஞரும் பேராசிரியருமான தோழர் நா. வானமாமலை சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். 1957-ஆம் ஆண்டில் இதன் முதல் பதிப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது. புதிய தலைமுறையின் தேவை கருதி ஐம்பதாண்டுகள் கழித்து இந்நூலை மீண்டும் வெளியிடுவதில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பெருமை கொள்கிறது.

இந்த நூல் மீண்டும் வெளிவருவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிய தோழர் S.A. பெருமாள் அவர்களுக்கு எமது நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

—பதிப்பகத்தார்