பக்கம்:உயிரில் கலந்தது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

யத்தை மட்டும் எனக்குக் கொடுத்திடப்பா! அப்பத்தான் என் நெஞ்சு வேகும்!” என்று நீர் தொடுத்து, நெஞ்சத்துக் கனவுகளையும் தொடுத்துப் புலம்பினுள்.

‘ஆகட்டும்; அம்மா’ என்ற பதில் அவரிடமிருந்து வந்தது.

தாய்க்கு ஆனந்தம் வெடித்தது. அப்போதே தன் மைந் தனே மலர் முகமும் மலர் மாலையுமாக, பங்கய முகத்துப் பாவையவள் பக்கத்தே வீற்றிருக்கக் கண்டுவிட்டது போன்ற ஒரு குதுகலம் இருக்கத்தானே வேண்டும்!

பெண்களின் பெயர்கள் சிலவற்றை பெற்றவள் ஒதினுள்.

“இந்த தஞ்சாவூரிலே சுசீலா ரொம்ப அழகான பொண்ணு. நம்ப பாம்பாட்டித் தெருவேதான். அப்பாரு, போலீஸ் இன்ஸ்பெக்டராம்!...மேலராஜ வீதியிலே கோம. தின்னு ஒரு பொண்ணு இருக்கு. திருவாரூரிலே கமலாட் சின்னு ஒரு தங்கம் இருக்குது. ஆன, ஒண்னு உன்ைேட. மாமன் மகள் மரகதத்தை மட்டும் நீ மறந்துப்பிடு...’ என்றாள்.

ஞானசீலன் தம்முடைய கதை ஒன்றைப்பற்றி எண்ண. மிட்டார். அந்தக் கதையில், தாய் ஒருத்தி தன் பிள்ளையிடம், ‘தம்பி, நீ யாரையானும் காதலிக்கிறீயா, சொல்லுt அவளேயே உனக்குக் கட்டிவைக்கிறேன்!” என்று கேட்கிருள். இப்போது அந்நிகழ்ச்சி நினைவில் சரம் கட்டியது.

‘தம்பி.!”

‘அம்மா!...”

பேச்சு மூச்சைக் காணலையேப்பா?”

பேச்சுத்தான் அம்மா இல்லை. ஆனல் மூச்சு இருக்குதே, அம்மா!’ -

பெற்றமணிவயிற்றினின்றும் மாணிக்கக்கட்டிச் சிரிப்பு. வெளி வந்தது.