பக்கம்:உயிரில் கலந்தது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


  • தம்பி!” என்று நெஞ்சினின்றும் புரண்ட பாச வெள்ளத்தில் சொற்களைத் தோய்த்தெடுத்து வெளிக் காட்டினுள் அவள். நெஞ்சிலும் நீர் ; ஒடுங்கிக் குழிவிழுந்த நயனங்களிலும் நீர். நீர்வெளிப் பெருக்கிடையே தாய் தத்தளித்தாள்; தாயுடன் சேர்ந்த மகனும் தத்தளித்தார் ! :தம்பி, ரொம்ப ரொம்பு இளைச்சுப் போயிட்டியேப்பா!’
  • அதெல்லாம் இல்லேம்மா. நான் இளைக்கலே, நீ தான் அம்மா, இளைச்சிருக்கே...வயசு காலத்திலே நான் உன் பக்கத் திலேயே இருந்தால், நல்லாயிருக்கும். ஆளு, ஆண்டவன் அதுக்கு உண்டான வசதியை நமக்குத் தரலே.” -
  • சரி, சரி. இனிமே எனக்கு பயமில்லே. ராத்திரிதான் பயப்பட்டேன். இப்ப தெளிஞ்சிருச்சு, போய் குளிச்சுப்பிட்டு வந்து பலகாரம் தின்னு. அப்புறம் நாம பேசலாம். பக்கத்து வீட்டு ஐயாவோட பொண்ணுதான் எனக்குத் தெய்வ மாட்டம் துணை இருந்துச்சு. இப்ப பலகாரம்கூட அதுதான் தயார்ப்பண்ணியிருக்குது,” என்று சொல்லி நிறுத்தினுள்

கோசலை.

குனிந்த தலை நிமிரவில்லை மகன் ஞானசீலன். உதட்டுச் சிரிப்பை மாற்றவில்லை அம்மா கோசலை. ஞாயிறு: இளங்காலைப் போது. -

டர்க்கி டவலால் சுருட்டை முடிகளைத் தேய்த்துத் தேய்த் துத் துவட்டினர் ஞானசீலன். காவிரி மண் வளப்பம் கொண் டது தண்ணீர். நீராடினர். குளுமையாக இருந்தது உடம் புக்கு. அது போலவே, அவரது முகமும் காந்தி பெற்று விளங் கிற்று. சுருட்டைத் தலைமுடியை முன் விரல்களால் கோதி *வாகு எடுத்துவிட்டவாறு கூடத்திற்கு வந்தார் அவர். பாய் விரித்து, பலகாரம் வைக்கப்பட்டிருந்தது. புது மாப் பிள்ளைக்கு உபசாரம் செய்கிருற்போல அங்கு-அப்பொழுது காரியங்கள் நடைபெற்றன. அவர் நெஞ்சு நிமிர்த்தி, நினைவு நிமிர்ந்து பார்த்த தருணத்தில், அந்தப் பெண் நாணமும்