பக்கம்:உயிரில் கலந்தது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


வையும் சொல்ல முடியாது. என் ஒருவனைச் சுற்றிலும் இப் பைய திலையிலே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் போட்டி போடுருங்க. இந்தப் போட்டியை அன்புப் போட்டி யாகவே மதிச்சு, அதுக்கு ஒரு வழி செய்யப் போறேன். இதைக் காதல் போட்டியாக்க எனக்கு மனசு ஒப்பமாட்டாது அம்மா. ஆனதாலே, அந்தப் பெரியவரோட விலாசத்தை எழுதி வாங்கிக்கங்க. இன்னும் பத்துநாளிலே தகவல் எழுதுறதாச் சொல்லி அனுப்பிடுங்க,” என்றார்,

அவ்வாறே அவளும் சொன் ஞள். பெரியவர் மாசிலாமணி மாசில்லாத மணிச் சிரிப்பைக் கக்கிவிட்டு இருவரிடமும் விடைபெற்றார்.

வாணி இப்பொழுது அமைதியாகப் பெருமூச்சு விடலானள்,

மண்டை ஒட்டில் நோவு கண்டது. ஆகவே படுக்கையில் சாய்ந்து சிறு பொழுதுவரை ஒய்வு கொள்ளவேண்டு மென்று தோன்றியது. ஆகவே, படுத்துத் துரங்க பிரயத்தனம் செய் தார் ஞானசீலன். அதற்குள் கைவளை குலுங்க, மென்னகை துளும்ப, எழில்விழி சிந்துாரம் சிந்த வந்தாள் வாணி. வந்த வள், நிற்கவில்லை; நிலைக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே படபடப்பு குறையாத குரல் எடுத்து, ‘ஸார், நான் நேற்று தந்துவிட்டுப்போன லெட்டருக்குப் பதில் தயாரிச்சுப்பிட்டிங் களா? என் கிட்ட இப்பவே சப்மிட் செஞ்சிடுங்களேன்” என்றாள்.

வியப்பு விரிந்த நேத்திர நோக்கை, வினயம் புரிந்த பெண் ணிைன் திசைக்குத் திருப்பிய ஞானசீலன் ஒர் அரைக்கணம் இன்பத் தவிப்பில் சுழன்றார். பிறகு, ஆசுவாசப் பெருமூச்சுடன் பதில் கொடுத்தனுப்ப எண்ணமிட்டு, அவதியுடன் காகி தத்தை எடுத்து, அவசரத்துடன் பேணுவைத் தூக்கிக்கொண்டு எழுதுவதற்கு உட்காரப் போர்ை. அப்பொழுது சென்னேயி லிருந்து உடனே புறப்பட்டு வரும்படி எக்ஸ்பிரஸ் லெட்டர்’ வந்து சேர்ந்தது. ‘உரிமையாளர் அவசரமாக உங்களுடன்