பக்கம்:உயிரில் கலந்தது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


மைேரஞ்சிதப் பூவுக்கு ஒரு மகிமை உண்டு. நெஞ்சைத் தொடும் வகைவகையான மணம் தரும் மணம் அதற்கு வாய்த்திட்ட நற்பேறு ஆகும். அந்தப் பூவை நிகர்த்திருந்தாள் இந்தப் பூவை. இவள் பெயரும் வாணிதான்! - வாணியைப் பற்றிய நினைவுகள், நீண்டு விரிந்த செந் தாழைமடல் குருத்துப் பூக்களாக ஞானசீலன் மனத்தில் சிதறின; நறுமணத்தைச் சிதறின.

கமலப் பூவின் புற இதழ் மருங்குச் சிவப்பினை நினைவூட்டும் வண்ணம் வண்ணம் கொண்டிலங்கிக் கொண்டிருந்தது அந்திவானம். -

ஞானசீலன் கண்களை மூடிமூடித் திறந்தார். ஆசைகள் திறந்து திறந்து மூடிக்கொண்டன. வாணியின் நினைவும் நினைவு முகமும் அவரை ஆட்டிப் படைத்தனவா? படைப்பின் சக்தியையே அவ்வாறு அலைக் கழித்தனவா? -

வாணியை எண்ணமிட்டார் அவர். மனமேடையில், தலைப்பாகை திகழ, மணவறையில் குந்தி யிருக்கப்போகின்ற காட்சி விரிந்தது! - எண்ணங்கள் அழுத்தம் பெற்ற தருணத்தில், நெஞ்சில் அழுந்திய பாவையென நினைவில் அழுந்தி நின்றாள் வாணி,

சிரித்த முகம். சிரிக்க வைக்கும் முகம் அது. கனவு காட்டும் கண்கள். கனவுகளைக் காட்டச் செய்யும் கண்கள் அவை. சிந்துரச் சிவப்பு உதடுகள். - - மந்தாரைப் பூவின் மயல் கொண்டவை அவை. ‘ஸார், நான் நேற்று தந்துவிட்டுப்போன லெட்டருக் குப் பதில் தயாரிச்சுப்பிட்டீங்களா!-வாணியின் முகவிலாசத்

3-370 . . . .” -