பக்கம்:உயிரில் கலந்தது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


ஞானசீலனின் முகச்சுழிப்பையும் சேர்த்து மூடியதாகவே பொருள். -

ஞானசீலன் மணியை அழுத்த முனைந்தார்.

சத்தம் பிறப்பதற்குள், ராதாவின் குரல் பிறந்தது. “ஐயா, காப்பி வேணுமா? இல்லே, நம்ம ஆனந்தன் அண் ளுச்சியைக் கூப்பிடட்டுமா? இல்லே, அது...” என்று கேட்டுக் கொண்டே, சி.க...ரெட் என்று ஜாடை காட்டிக் கண் சிமிட்டித் தொடர்ந்தான்.

ஞானசீலன் மெல்லச் சிரித்தார். பையன் ராதாவைப் பற்றி அவருக்கு எப்போதுமே அனுதாபம் உண்டு. ‘மனிதர் களின் அன்புக்குப் பாத்திரமாவது அவ்வளவு விரும்பத்தக்க தல்ல,” என்று அவர் ஒரு கதையில் எழுதியதை மறக்காம லேயே, அந்தச் சிறுவன் பேரில் அனுதாபம் கொண்டார். அனுதாபம் என்றால் அன்பின் வழிப்பட்ட அனுதாபம்! குற்ற வாளி ராதாவா? அல்ல! நான்தான்! தன்மீது அனுதாபப் படும்படி அவளு என்னிடம் சொன்னன்? அப்படிச் சொன் ளுல்தானே தப்பு! இதுதானே என் கருத்து?...’

காப்பிக்கு உத்தரவிட்டபடி, காப்பி வந்தது. ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஆனந்தனை அழைத்து வந்தான். ஆனந்தனும் ஞானசீலனும் அடுத்ததாக அச்சிடப்பட வேண்டிய பார”ங்களைப்பற்றிப் பேசினர்கள். ஆனந்தன் நீட்டிய அச்சுப்படிகளைக் கையேந்திப் பெற்றார். புழுதிக் கோயில் என்ற அவரது தொடர்கதையின் இறுதிப் பகுதி அது. “பெண்மை வாழ்க!” என்றிருந்த அத்தியாயத் தலைப் பின் கீழே தடித்த எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட் டிருந்த வாசகத்தை நட்ட நடுவில் பார்த்தார்.

“சிறுவர்களும் சிறுமியர்களும் ஒழுங்கை நெடுக, குறுமணல் குவித்து மணல் வீடு கட்டி விளையாடும் பொழுதில் பொய்ச் சோறு சமைத்துச் சாப்பிடுவ தாக பாவனை செய்வது போலவேதான், இந்தச் சமு.