பக்கம்:உயிரில் கலந்தது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


அதுவே இஷ்டம். உடன் புறப்பட்டு வந்தால் தேவலாம்.

மாரிஅம்மன் துணை,

வாணி.” ஞானசீலனுக்கு உண்டான குதுாகலம் அவ்வளவு, இவ்வளவல்ல மனக்கனவுகளின் புள்ளிக் கோல விளையாட்டு தொடர்ந்தது. உதட்டுக் கங்கில் உற்பத்தியான நகைத்துளி களிலே தேன்சுவை மிதந்தது.

அன்றையத் தபால்களைப் பார்வையிட்டார்.

‘நாவல்- சிறுகதை தேக்கம்பற்றி ஒருதலைப்பட்ட விமர் சனம் செய்திருந்த எழுத்தாளரைப்பற்றி முன் இதழில் *காரசாரமாகத் தாக்கி உபதலையங்கம் தீட்டியிருந்ததைப் பாராட்டி மானமதுரை அன்பர் எழுதிய கடிதத்தையும் சேர்த்து வந்துசேர்ந்த போற்றுதல் கடிதங்கள் நூற்றி ஏழு. அவரது நெஞ்சம்-இலக்கிய நெஞ்சம் விம்மிப் பெருத்தது. தோள்கள் விம்மிப் பெருத்தன. பேன பற்றும் எழுத்தாளனே உண்மையான முதல் வீரன்! அவனது முதற்பணிதான் பிறந்த பொன்னுட்டினுக்கு முதற் தேவை என்ற தம் கருத்தை மறு: படியும் ஸ்திரப்படுத்தினர். . . . . . .

பார்வையாளர்கள் வந்திருப்பதாகத் தகவல் வந்தது. ப ர்க்க வந்தவர்கள் உள்ளே நுழைந்தார்கள். வாடிக்கையான உபசரிப்புக்குப் பிறகு, இலக்கியப் பூவுலகம் சுழன்றது. சிற்றின்ப நுகர்ச்சியை எழுப்பவல்ல ஆபாசக்கதைகள் எழுதி சல்விசான அற்பப் புகழ் சம்பாதித்தவர்களிலிருந்து, அயல்மொழிக் கதைகளை நாகுக்காத் திருடி, ஆளுல் அந்தத் திருட்டில் மாட்டிக் கொள்ளாமல், அல்லது அந்தத் திருட்டை ரகசிய ஒப்பந்தத்துடன் செய்து துணிவுடன் முன்னேறி “இரவல் புகழ் ஆசாமிகள் வரையிலும் பேச்சு நடந்தது.