இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
முன்னுரை
தமிழ் உரைநடை பற்றி எனது நண்பர் சி. சு. செல்லப்பாவின் கருத்துக்களை தான் மேற்கோள் காட்டியுள்ளேன். அவை என் கருத்துக்களோடு உடன்படுகின்றன. ஆயினும் என் கருத்துப் போக்கின் தனித்துவத்தை நான் மறுக்கவில்லை.
இது அடிப்படைகளை ஆராயும், அறிமுக நூல்தான். இதனை ஒரு விளக்க நூலாகக் கருதுதல் கூடாது.
தற்காலத் தமிழ்நடை குறித்தும் இது வலிவும் வனப்பும் பெற்று வளர வேண்டிய துறைகள் பற்றியும் நாம் விரிவாக ஆராயவேண்டும்.
நா. வானமாமலை