பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

ஆண்டவன் ஒருவனைக் கைவிடத் தீர்மானித்தால், சுண்டெலிகூட அவனைக் கடித்துக் கொன்றுவிடும் - ஹாலந்து இறைவனின் கோபத்தை எடை போடலாம், ஆனால் அவன் அருளுக்கு அளவே கிடையாது. -இங்கிலாந்து (இராட்டினத்தில்) கதிரைத் தயாராக வைத்திருந்தால், கடவுள் பஞ்சை அனுப்புவார். - இங்கிலாந்து ஆண்டவன் உள்ள இடத்தில் எல்லாம் இருக்கின்றன. -( " ) ஆண்டவனுக்காக இழப்பது இலாபமேயாகும். - இங்கிலாந்து மனிதன் தன்னால் இயன்றதைச் செய்வான்; இறைவன் தான் நினைப்பதைச் செய்வான். - இங்கிலாந்து ஆண்டவன் நிச்சயமாகக் கரைச் சேர்ப்பான்; ஆனால் கடலில் புயல் வராதென்று அவன் உறுதி சொல்லமாட்டான். - இங்கிலாந்து உன் இதயத்தை ஆண்டவனுக்கும், உன் தானங்களை ஏழைகளுக்கும் அளிப்பாயாக. - ஸ்காட்லந்து

அபாயம் நீங்கியதும் நாம் ஆண்டவனை மறந்து விடுகிறோம்.

-ஸ்காட்லந்து

சயித்தான் செத்தொழிந்தால், ஜனங்கள் கடவுளுக்காக ஒன்றும் செய்யமாட்டார்கள். - ஸ்காட்லந்து ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால், சயித்தானுக்கு இரண்டு ஏற்றுங்கள். - ஸெர்பியா வானின் அருளிருந்தால், விருந்துக்கு வேண்டிய ஆடு உன் வீடு தேடிவரும். - ஆர்மீனியா உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்.

- குர்திஸ்தானம்

இருவர் உள்ள இடத்தில், கடவுளைச் சேர்த்து, மூவர் உள்ளனர். - கீழ்நாடுகள்