12
‘பிஸ்மில்லா' என்று இறைவன் திருநாமத்தால் எதையும் தொடங்கினால், நன்மையே வரும்; ஆனால் இது நரி வேட்டையிலன்று.
-ஆப்கானிஸ்தானம்
கத்தி தலைக்குமேல் வந்ததும், மனிதனுக்குக் கடவுளின் நினைவு வருகின்றது.
-ஆப்கானிஸ்தானம்
இறைவனும் ஈச்சம்பழங்களும் சேர்ந்தாற்போல் உனக்குக் கிடைக்க முடியாது.
-பாரசீகம்
கடவுள் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி கேட்பவர்கள்
(சொந்தக் கால்களில் நிற்காமல்) மரக் கால்களுடன் நிற்பவர்கள்.
இறைவன் திருநாமமே செல்வம், அது நம்மை அடுத்துக் காக்கும்.
-சீக்கியர்
தானாகக் கடவுளுக்கு அஞ்சாதவன் கட்டாயத்தினால் மனித சமூகத்திற்கு அஞ்சவேண்டும்.
-ஸுஃபி
கடவுளுக்கு அஞ்சு; அடுத்தபடியாகக் கடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சு.
- போலந்து
கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு உன் வண்டியைத் தள்ளு.
- போலந்து
கடவுள் அடிக்கடி நம்மிடம் வருகிறார், ஆனால் பெரும்பாலும் அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை.
- ஃபிரான்ஸ்
கடவுளின் (அடியார்களாகிய) ஞானிகளை அண்டுவதைப் பார்க்கினும், கடவுளையே அண்டு.
-ஃபிரான்ஸ்
இறைவனில்லாமல் எதுவுமில்லை.
- ஃபிரான்ஸ்
நம் இறைவன் ஒரு வலிய கோட்டை.
கடவுள் பாலைத்தான் கொடுப்பார், பாத்திரத்தையும் கொடுப்பதில்லை.
- ஜெர்மனி