இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை
ஒரு நாட்டின் பழமொழிகளைத் தொகுத்தாலே அது அறிவுக் களஞ்சியமாகவும், அநுபவக் களஞ்சியமாகவும் விளங்கும். இந்நூல் உலகிலுள்ள பல நாடுகளின் பழமொழிக் களஞ்சியம். இது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டிய நூல், நாள்தோறும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். ஆசிரியர் திரு. ப. ரா., படிக்கப் படிக்க இனிமை பெருகும்படி. இதைத் தொகுத்து மொழி பெயர்த்துள்ளார்.
இதற்குத் தமிழ் மக்களின் பேராதரவு கிடைத்து நான்காம் பதிப்பு வெளிவருகிறது.
ஆசிரியருக்கும், சிறப்பாக அச்சிட்டு உதவியவர்களுக்கும் எமது நன்றி.
ந. பழநியப்பன்
சென்னை -35.
வள்ளுவர் பண்ணை