பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும். -எஸ்டோனியா வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது. -எஸ்டோனியா குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை, -எஸ்டோனியா குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும். —( ** } பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும். -எஸ்டோனியா மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்ப்ளவு உயரம் இருக்க வேண்டும். -எஸ்டோனியா பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற் பனைக்குரிய பொருள்கள். -எஸ்டோனியா குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவு வதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது. -பின்லந்து மூடன் தன்_குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன் தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ் வான். -பின்லந்து ஒற்றைக் குழந்தை கடவுளின் தண்டனை. -ஹங்கேரி ஆந்தையும் தன் மகனை இராஜாளி என்றே கருதுகின்றது. -ஹங்கேரி தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது. -இத்தாலி குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது. -இத்தாலி அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்ரும் மாதம் குழந் தையை அடைகிருர்கள். -லத்தீன் அதிருஷ்டமுள்ளவனுக்கு முதற் குழந்தை பெண்ணுயிருக்கும். பார்ச்சுகல் கி. LP.-6