பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மேலே விண்வெளி தொடங்குகிறது என்பதில், பலதுறை அறிஞர்களிடையே பல்வேறு கருத்து க்கள் நிலவுகின்றன: பூமியிலிருந்து 19 கிலோ மீட்டர் ( தாலைவுக்கு மேலே விண் வெளி தொடங்குகிறது என்று உயிரியல் அறிஞர் களும், 32 கி. மீட்டருக்கு மேலே என விண் பெளதிகவிய லாரும், 56 கி. மீட்டருக்கு மேலே என்பதாக வானூர்தித் துறை ஆராய்ச்சியாளரும். 250 கி. மீட்டருக்கு மேலே தொடங்குவதாக ராக்கெட் துறை ஆய்வாளர்களும், 480 கி. மீட்டருக்கு மேலே என்பதாக வானொலித் துறை யினரும், நான்கு இலட்சம் 4,00, 000 கி. மீட்டருக்கு மேலே விண்வெளி தொடங்குவதாகப் புவிப் பெளதிக வியலாரும் கூறுகின்றனர். இவற்றுள் எது சரி - எது தவறு என்று யார் கூறுவது? இந்தப் பல்வேறு துற்ை. யினர்க்குள், மறுப்புக்கும் பழிப்புக்கும் அவமதிப்புக்கும் உரியவர் யார்? யார்? எனவே, எதிர்ப்புக்குப் பின்வாங் காமல், பிரபஞ்சத்தின் பரிணாமம்பற்றி நாமும் கருத்துக் கூற முயலலாம். ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை. பல் வேறு கருத்துக்கள்ைப் போட்டு வைத்தால், பின்வருப. வர்கள் தொடர்ந்து ஆராய இடம் உண்டு பண்ணியவர் களாவோம். - ஒத்த பரிணாமம் ஈண்டு முன் கூறியுள்ள சில கருத்துக்களை மீண்டும் ஒரு முறை சுருங்கத் தொகுத்துப் பார்ப்போம். ஞாயிறு பூமியைப் போல் கல்லும் மண்ணுமாக இறுக்கம் பெற்று இருக்கவில்லை; அது வெப்ா வாயு வடிவாயுள்ளது. இந்த ஞாயிற்றிலிருந்தே பூமி முதலிய கோள்கள் தோன் றின. பூமியிலிருந்தே திங்கள் (சந்திரன்) பிரிந்து தோன்றி யது. பூமியில் விழும் எரிமீன்கள் குளிர்ந்து சாம்பலாகவும்: இறுக்கமான பாறைகளாகவும் மாறுகின்றன. இந்தச் 71 செய்திகளை வைத்துக் கொண்டு ஒரு சார் முடிவு எடுக்க முயலலாம்; பூமி கல்லும் மண்ணுமாக இருப்பதை நேரில் காண் கிறோம். ஞாயிற்றிலிருந்து பிரிந்தனவும் ஞாயிற்றைச் சுற்றி வந்தனவும் பூமியின் காற்றுப் படலத்துக்குள் தவறி அகப்பட்டுக் கொண்டனவுமாகிய எரி விண்மீன் 'கள் சில, பூமியில் விழுந்து சாம்பலாகவும் பாறைகளாக விம் மாறி இருப்பதையும் நேரில் காண்கிறோம். ஒரு முறை ம்ெக்சிகேர் நாட்டில் விழுந்த எரிவிண்மீன் பாறை யொன்று சுமார் ஐம்பது டன் எடையுடையதா யிருப்பதாக முன்னரே கூறப்பட்டுள்ளது. இது நேரில் கண்ட காட்சி. அண்மையில் (சில ஆண்டுகட்கு முன்). விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து பிரிந்த நிலாவுக்குச் சென்று, அங்கே பாறைகள் இருப்பதை நேரில் கண்ட தல்லாமல், அங்கிருந்து கல்லும் மண்ணும் கொண்டு வந்து நமக்குக் காட்டியதை நேரில் அறிந்தோம். மற்றும், பூமியிலுள்ள நிக்கல், இரும்பு முதலிய தாதுப் பொருள் கள், பூமியில் விழுந்துள்ள எரிவிண்மீன் பாறைகளிலும் -- இருப்பதையும் ஆய்வு மூலம் நேரில் அறிந்துள்ளோம். பூமியில் என்றென்ன வெள்ளியில், கத்தக்ம், கந்தக அமிலம், குளோரின், பாஸ்வரம் முதலியன உள்ளன வாம். எரி. விண்மீன்கள் என்றென்ன! வால்விண்மீன் களில், நீர், மீதேன், கார்பன்டையாக்சைடு, அம்மோ னியா, மானாக்சைடு முதலியன இருக்கின்றனவாம். வியாழனைச் சுற்றியுள்ள வளையம் ஒன்றில், பல்வேறு கூறுகள் அடங்கிய பாறைகள் பல உள்ளனவாம். மற்றும், . யுரேனசுக்கு மிக அண்மையில் உள்ள மிராண்டா' இMiranda) என்னும் நிலவில், 32% விழுக்காடு பாறை 'களும், 53%-விழுக்காடு- உறைந்தடநீர்ப்பனியும், 7%. விழுக்காடு அம்மோனியாவும், 8% விழுக்காடு. மீத்தேன்