பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பையனுக்கு வால்தான் இல்லை-அறுந்த வால் ' என்று சொல்வதைக் கேட்கிறோம். ஒரு வாலும் இல்லாதிருக்கவும். மிகுதியாகக் குறும்பு செய்யும் பையனைப் பார்த்து இவன் இரட்டைவால் ' எனவும், வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்' எனவும் , 'வாலைச் சுருட்டி மடக்கிக் கட்டிக் கொள்' எனவும் மக்கள் கூறுவதையும் கேட்டு வருகிறோம். இந்தியப் பெருநாட்டில் இராமாயணம் என்னும் ஒரு காப்பியக் கதை வழங்குகிறது. அதில், வாலுள்ள மனிதக் குரங்குப் படைகள், காப்பியத் தலைவனாகிய இராமன் தன் எதிரியாகிய இராவணனைக் கொன்று வெல்லத் துணை புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியப் பெரு நாட்டில் குஜராத் என்னும் பகுதியில், மனிதத் தாய் ஒருத்திக்கு வாலுடன் குழந்தை பிறந்ததாகவும், அந்த வால் நாளுக்கு நாள் வளர்ந்து வந்ததாகவும், அதைப் பின்னர் மருத்துவர்கள் அறுவை செய்து அகற்றியதாகவும் செய்தித்தாளில் வெளி வந்ததை (1980 ஜூலை) உலகினருள் சிலராவது படித்தறிந் திருக்கலாம். அவ்வளவு ஏன்? இப்போதுள்ள மாந்தர்க்கும் வால் (வால் போன்ற பகுதி உள்ளது. அது வெளியில் வராமல் உள்ளேயே இருக்கிறது. இது மனிதத் "தாயின் கருவில் நன்கு தெரியும். இந்த வால் என்பது στσότσοτ? மக்களின் முள்ளந்தண்டிலே பிட்டத்திற்கு-குண்டிக்கு உரியதான இடுப்படி முட்டு முக்கோண எலும்பு' உள்ளது. இதனை ஆங்கிலத்தில் Sacrum (சேக்ரம்) என்பர். இந்தப் பகுதிக்குப் பின்னால் உள்ள சிறு முள் எலும்புகளும் அவை சார்ந்த மற்ற திசுக்களும் (Tissues) அடங்கிய ஒரு தொகுதியே வால் எனப்படுவது. இது, சுற்று முற்றும் தோலால் மூடப்பட்டிருக்கும். உடம்பின் மற்ற பாகங்களிலிருந்து பிரிந்து தனித்தும் நீள் வடி விலும் இருக்கும். இது ஆங்கிலத்தில் Coccyx' (காக்சிக்ஸ்) 15 எனப்படும். காக்சிக்ஸ்’ என்றால், உள்வால் எலும்பு பகுதி என்று பொருளாகும். இது, குஜராத் குழந்.ை ையப் போலச் சில ருக்கு வெளியிலும் வந்துவிடும் போலும். எனவே. இப்பொழுது உள்ள மாந்தர்க்கும் வால் உண்டு என்பது புலப்படும். வால் போகட்டும்! கபி என்னும் மனிதக் குரங்கு வகை, வால் இல்லாப் பெருங்குரங்கு வகை (Gorilla) உராங்குடான் வகை - ஆகியவற்றின் உடல் உறுப்பு அமைப்புகளிலும் உடல் இயல் இயக்கங்களிலும் பல கூறுகள் மாந்தரோடு ஒத்திருப்பது சண்டு குறிப்பிடத் தக்கது. உராங்குடான் பற்றிச் சில காண்போம்.: இந்தோனேசியா நாட்டுக் காடுகளில் வாழும் மனிதக் குரங்குகள் உராங்குடான்' என்று பெயர் வழங்கப்பட் டுள்ளன. அந்நாட்டு மொழியாகிய மலாய் மொழியில் 'உராங்குடான்' என்பதற்குக் காட்டு மனிதன்' என்பது பொருளாகும். இங்கே முதல் முதலாக வந்த ஐரோப்பி யர்கள் இவற்றைக் காட்டு மனிதர்கள்’ என்றே எண்ணினராம். உருவத்தில் மனிதரை ஒத்துள்ள இவை, ஆறு அடி உயரம் உள்ளவை. மனிதர்கள் போன்றே நேராக நிமிர்ந்து நடக்கும் இவற்றிற்கு வால் இல்லை. ஒரு காலத்தில் உராங்குடான்கள் மனிதராகவே வாழ்ந்ததாகவும், இடையிலே கடவுளைக் கேலி செய்த த ல், கடவுள் இவற்றைச் சபித்து விலங்குகளாக மாற்றி விட்டதாகவும், போர்னியோ’ என்னும் தீவில் வாழும் ஆதிவாசிகள் கூறுகின்றனராம். - இந்தச் செய்திகள் எல்லாம், மனிதனது முன் தோற்றம் - முதல் தோற்றம் குரங்கு-இதற்கும் மனித னுக்கும் இடைப்பட்டது மனிதக் குரங்கு-என்பதற்கு உரிய சான்றுகளாகும். அப்படியென்றால், மனிதக்