பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சென்று உணவு ஊட்டுகிறது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது.

எப்போது? பகல் நேரத்தில்; இரவு நேரத்தில் அல்ல. இரவு நேரத்தில் தாவரங்கள் என்ன செய்கின்றன. கழிவை ஆவியாக வெளியே விடுகின்றன. நாள் தோறும் இது நடைபெறுகிறது.

தாவரங்கள் கஞ்சி காய்ச்சும் முறை இருக்கிறதே! இதற்கு ‘போட்டோ சிந்தசிஸ்' என்று பெயர்.

இவ்விதம் தாவரங்கள் பூமியில் உள்ள சத்துக்களை எல்லாம் சேகரித்து அருமையான கஞ்சி காய்ச்சி வளர்கின்றன.

எங்களை உண்டு உயிர் வாழுங்கள் என்று கூறி மற்றைய உயிர் இனங்களையும் வளர்க்கின்றன. வள்ளல்களைப் போல் வாரி வழங்குகின்றன.