பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

அவர் சொல்லிக் கொடுத்த நட்சத்திரங்களின் உருவம் என் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது.

இரவு நேரத்திலே என் தந்தையார் வாசலிலே படுப்பார். திறந்த வெளியிலே கயிற்றுக் கட்டிலிலே படுத்திருப்பார்.

அவர் அருகே மற்றொரு கட்டிலில் நானும் படுத்திருப்பேன். என் அருகே எங்கள் வீட்டு நாய் இருக்கும். சற்றுத் தொலைவில் எங்கள் வீட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.

நிலவு நாட்களிலே அந்தச் சூழ்நிலை மிக இன்பமா யிருக்கும்.

வானத்திலே ஓடுகின்ற மேகக் கூட்டங்கள் என் சிந்தை கவரும். அவற்றிற்கிடையே ஒளியும் தண்மதி என் மனத்தைக் கொள்ளை கொள்ளும்.

இவற்றிற் கிடையே கண் சிமிட்டும் தாரகைகளைக் கவனிப்பேன். அவற்றில் ஈடுபட்டவண்ணம் என் தந்தையாரிடம் பலப் பல கேள்விகள் கேட்பேன்.

‘எலேய்! என்னடா பார்த்துக் கொண்டிருக்கே’ என்பார் என் தந்தையார்.

‘ஆகாயத்தைப் பார்க்கிறேன். நம்ம தலைமேலே அது இருக்கே.’