பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

மைல் வேகத்தில் துள்ளி ஓடி அட்டகாசம் செய்கின்றன.

இவ்விதம் அணுக்கள் அட்டகாசம் செய்வது ஏன்? அணுவில் மின் சக்தி இருப்பதால். மின்சக்தி எப்படி இருக்கிறது? எலக்ட்ரான் என்னும் பொறியாக இருக்கிறது.

அணுவிலே உள்ள இந்த சக்தி சில சமயத்தில் பீறிட்டு அடிக்கும். இவ்விதம் பீறிட்டு அடிக்கும் அணுக்களுக்கு ரேடியோ ஆக்டிவ் அணுக்கள் என்று பெயர்.

சூரிய மண்டலத்திலே உள்ள அணுக்கள் மகத்தான குஸ்தி போடுகின்றன. அதனாலே அணுசக்தி பீறிடுகிறது. அந்த அணு சக்தியே சூரிய கிரணங்கள். அவை மின்கதிர்கள்; உஷ்ணக் கதிர்கள்.

'வாயு மண்டலத்தில் பாய்ந்து வரும் அந்த உஷ்ணக் கதிர்களே சூரிய வெளிச்சம் என்றும் வெய்யில் என்றும் அழைக்கப்படுகின்றன.

பிரபஞ்சத்தின் தலை நாளிலே சூரியன் எப்படித் தோன்றியது என்று கண்டோம். அந்த வாயுக் கூட்டத்திலிருந்து பல கோளங்கள் தோன்றின . என்றும் அறிந்தோம்.