இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘ஆமாம்’ என்பார் தந்தையார்.
‘பொத் என்று என் தலை மேலே விழுந்துட்டா என்ன செய்யறது அப்பா.’
‘அப்படி விழாது.’
‘விழாமல் கடவுள் பார்த்துக் கொள்வாரா?’
‘ஆமாம்.’
நான் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘என்னடா யோசனை?’
இது தந்தையாரின் கேள்வி.
‘அது இடிந்து நம்ம தலைமேலே விழுந்துட்டா ...’
‘அதெல்லாம் விழாதுடா.’
‘ஏன் விழாது?’
‘கடவுள் பார்த்துக் கொள்வார்.’
"வானம் இடிந்து விழாமல் கடவுள் பிடித்துக் கொள்வாரா?’
‘ஆம்.’