பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

‘இந்த சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றை யெல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு அப்பா.’

‘ஏண்டா?’

‘பொத் என்று என் தலைமேலே விழுந்துட்டா என்ன செய்யறது அப்பா.’

‘அப்படி விழாது.’

‘ஏன் விழாது?’

‘கடவுள் பார்த்துக் கொள்வார்.’

‘அப்படியா!’

நான் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘என்னடா யோசனை.’

இது தந்தையாரின் கேள்வி.

‘இல்லேப்பா, பூமிக்கு மேலே ஏழு லோகம் இருக்கு என்று செவிட்டு வாத்தியார் சென்னார் அப்பா.’

‘ஆமாம்.’

‘ரொம்ப உயரத்தில் இருக்கோ?’

‘ஆமாம்.

‘சுவர்க்கத்துக்கு எப்படி அப்பா போறது.’