இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
'வழி இருக்கு.'
'ஏன் நம்ம கண்ணுக்குத் தெரியல்லே.'
‘தெரியாது.'
‘நம்ம தாத்தா பாட்டி எல்லாரும் அங்கே தானே இருக்கா?'
'ஆமாண்டா '
'மேலே எப்படி அப்பா அவா இருக்கா. கீழே விழுந்துவிட மாட்டாளோ'
'விழாமாட்டா'
'சொர்க்கத்துக்குப் போனவர் . திரும்பி வரமாட்டாரா அப்பா.'
'வர மாட்டார்.'
'ஏன் அப்பா! போன வழியாவே இறங்கி வரக் கூடாதோ .'
தந்தையார் பதில் சொல்லவில்லை.
'அப்பா!'
‘தூங்குடா.'
நான் தூங்கிவிடுவேன். ஆனால் என் உள்ளத்திலே தோன்றிய எண்ணங்கள் - ஐயப்பாடுகள் - அலைகள் - தூங்கினால் தானே! மறு நாளும் இதே போன்ற கேள்விதான்.