பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

‘அப்பா, பாரப்பா! அண்ணன் அடிக்கிறான்.'

‘நீ என்ன செய்தாய்?'

‘நான் ஒன்றும் செய்யலே. சிவனே என்றிருந்தேன்.'

சிவனே என்று இருத்தலாவது என்ன? சும்மா இருப்பது. ஒன்றும் செய்யாமல் இருப்பது.

புரொதான் சிவனே என்று இருக்கிறான். எலக்ட்ரான் நடம் புரிகிறாள்.

பரமாணுவிலே ஒரே ஒரு காதலன் காதலிதான் இருப்பதாக நினைக்க வேண்டாம். காதலர் பலர் உள்ளனர். காதலிமாரும் பலர் உள்ளனர். அவை எல்லாம் பரமாணுவின் தன்மையைப் பொறுத்தவை.

சில பரமாணுவிலே ஒரே ஒரு புரொதானும் ஒரே ஒரு எலக்ட்ரானும் மட்டுமே இருக்கும்.

இன்னும் சிலவற்றிலே பல புரொதான்களும், பல எலக்ட்ரான்களும் இருக்கும். இம்மாதிரி இருப்பதால் அறிவியல் அறிஞர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?