பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

பிறகு சிறிது சிறிதாக அதன் உடல் குளிர்ந்தது. ஆனால் உள்ளம் குளிரவில்லை. இன்று வரை இல்லை. உஷ்ணவாயு கோளமாயிருந்த பூமி கெட்டிப்பட்டது; குழம்பாயிற்று; திரவ கோளமாயிற்று. இப்படிப் பல நூறு ஆண்டுகள்; பிறகு பூமியின் மேல் பகுதி மட்டும் மெல்லிய தோல் மாதிரி ஆயிற்று; இறுகியது. உள்பகுதி மட்டும் ஒரே குழம்பாயிருந்தது.

அந்த நிலையில் பூமி, சூரியனைச் சுற்றி வந்து கொண்டு இருந்தது. அதே சமயத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் இருந்தது.

சூரியனிடமிருந்து விலகி வந்த நாளிலே பூமி இப்போது போல் மெதுவாகச் சுற்றவில்லை. மிக வேகமாகச் சுழன்றது.

இப்போது பூமி தன்னை ஒரு முறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. ஆனால் அந்தக் காலத்திலே ஆறுமடங்கு வேகம் அதிகமாகச் சுற்றியது. அதாவது நாலே மணி நேரத்தில் பூமி தன்னைத்தானே சுற்றி வந்தது.

அவ்வளவு வேகமாக அவள் சுற்றிய காலத்திலே அவளுக்குக் கரு உண்டாயிற்று.