பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

வியப்பூட்டும் கதை! இக்கதையை உயிரினங்கள் தாங்களே எழுதி வைத்திருக்கின்றன.

ஆம். தாங்களே எழுதி வைத்திருக்கின்றன.

உயிரினங்களின் சுயசரிதம் என்ற இப்புத்தகம் ஐந்து பாகங்கள் கொண்டது. ஐந்தில், முதல் இரண்டு பாகங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மிகப் பழைய புத்தகம் பாருங்கள். பக்கங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. மீதியுள்ள மூன்று பாகங்கள் மிகத் தெளிவாயுள்ளன.

இந்த மூன்று பாகங்களிலும் பதினாறு அத்தியாயங்கள் உள்ளன. அவற்றைப் படித்துப் பார்த்தால் என்ன சொல்லத் தோன்றுகிறது!

"ஆகா! என்ன விந்தை! என்ன விந்தை!" என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு சுவையான கதை! அதிசயமான கதை! படிக்கப் படிக்கப் பிரமிப்பூட்டும் கதை! உயிர் இனங்கள் தாங்களே எழுதி வைத்துள்ள சுயசரிதை. இயற்கை அன்னை நமக்கு அளித்தது. மனித சமுதாயம் பயன் பெற வேண்டிக் கொடுத்த ஒன்று.