இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55
வில்லியம் ஸ்மித் பெரிதும் ஆச்சரியம் கொண்டார். மலையிலே எப்படிக் கடல் வாழ் உயிரினம் வந்தது? என்று சிந்தித்தார்.
ஒரு காலத்தில் அப்பகுதி கடல் அடியில் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
கடல் அடியிலே கிடந்த நிலப்பரப்பு எப்படி மேலே வந்தது? இந்த பூமியானது, தோன்றிய காலம் முதல் இதுவரை ஒரே மாதிரி இல்லை. பூமியின் பல பகுதிகள் நீரிலே அமிழ்ந்து கிடந்தன. பூகம்பங்கள் ஏற்படும் காலத்திலே இவை மேலே எழும்பின என்று கண்டோம்.
அப்படி எழும்பிய மலைகளுக்குச் 'செடிமெண்டரி ராக்ஸ்' என்று பெயர். 'செடிமெண்ட்' என்றால் வண்டல் என்று பொருள்.
‘செடிமெண்டரி ராக்ஸ்' என்றால் “வண்டல் படிந்த குன்றுகள்' என்று பொருள்.
வண்டல் எப்படிப் படிந்தது? எங்கிருந்து படிந்தது? அது எப்படிப் பாறை ஆயிற்று?