இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இத்தகைய உள்ளுணர்வுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். எனது முயற்சியிலே எவ்வளவு தூரம் வெற்றி யடைந்துள்ளேன் என்பதை நான் அறியேன்.
இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு கட்டுரைகளாகப் பத்திரிகையிலே வெளிவந்த விஷயம் இது.
பின்னே 1956ம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்தது.
முதன் முதலாகத் தமிழ் மொழியிலே இதுபற்றி வெளிவந்த நால் இதுவே.
அப்போது அன்பர் பலர் பாராட்டினர்: உற்சாக மூட்டினர்.
நீண்டகால உறக்கத்தின் பின் இந்நூலின் மறு பதிப்பு இப்போது வெளிவருகிறது. இந்நூலை வெளியிட என் மனைவி திருமதி ஜலஜா சக்திதாசன் அவர்களும் பெரிதும் உதவினார்.
இதனை வெளியிட முன்வந்த பதிப்பகத்தாருக்கு எனது நன்றி.
சக்திதாசன் சுப்பிரமணியன்[1]
- ↑ இந்நூல்வெளிவருமுன் இவர் அமரராகி விட்டார்.