பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

இந்த இரண்டு அசுர இனங்களும் கடலிலே புகுந்து அட்டகாசம் செய்யத் தொடங்கின. கடலிலே சிறு உயிர்களுக்குப் பஞ்சம் இல்லை அல்லவா! வயிறு புடைக்கத் தின்னலாம்.

இன்னும் சில அசுர இனங்கள் பிழைக்க முடியாமல் தத்தளித்தன. ஓடவும் முடியவில்லை. வாழவும் முடியவில்லை உயிருக்கு மன்றாடித் தவித்தன.

அவற்றிற்குப் பறக்கும் சக்தி உண்டாயிற்று. அவற்றின் முன் கால்கள் இறகு போலாயின. பறவை இனத்தின் மூதாதைகள் இவை.

விலங்கினத்தினின்றும் மெதுவாகப் பறவை இனம் தோன்றிய காலம் இதுவே. இந்தப் பறவைகளின் உடல் அமைப்பு அசுரப் பிராணியின் உடல் போன்றதே.

இவற்றிற்குப் பல் உண்டு. ஆனால் பறக்கும். சுமார் இருபத்தைந்து அடி நீளம் இருக்கும். ராமாயணத்திலே வருகிற ஐடாயு மாதிரி! 'ஆர்க்கியோப்டரிக்ஸ்' என்று இவற்றிற்குப் பெயர்.

பறப்பதற்குச் சிறகு இருப்பது தவிர