பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஆனால் அவை, நம்மைப் போல் நிமிர்ந்து நேராக நடப்பது இல்லை. அவ்வளவே.

மலைகளிலே தங்கிய இந்தக் குரங்குகள் வெகு வேகமாக ஓடத் தொடங்கின. அதனால் காலிலே பிடிப்பும், கையிலே பிடிப்பும் அவற்றிற்கு உண்டாயின. அதாவது மரக்கிளைகளை இறுகப் பிடிக்கும் சக்தி கால்களுக்கு உண்டாயின: கைகளுக்கும் உண்டாயின.

இந்தக் குரங்குகள் மரக்கிளைகளைப் பிடித்துத் தொங்கின; தாவின. இவ்விதம் கிளைக்குக் கிளை ஊசலாடித் தாவும் வழக்கம் வளரவே அவற்றின் உடல் அமைப்பிலும் மாறுதல் தோன்றின. இடுப்பிலே வலு உண்டாயிற்று. நிமிர்ந்து நிற்கத் தொடங்கின.

இல்விதம் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியவனே மனித குலத்தின் மூதாதை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த மூதாதையர் காலம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் முன்பு எனலாம்.