சமயம் - புத்தசமயம் - சீக்கிய சமயம் - சோரோத்திரிய சமயம் - கிருத்துவ சமயம் - யூத சமயம் ஆகிய எழு சமயங் களின் வரலாற்றையும், அவற்றின் கொள்கைக் கோட் பாடுகளையும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார்.
உலகிலே புரட்சிசெய்த பே ைவீார்களான ரூசோவால்டேர் - பிரான்ஸிஸ்பேகன் - எமிலிஜோலா ஆகியோ ரின் வாழ்க்கை வரலாற்றினைத் தெளிவாகவும், எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய முறையிலும் எழுதியுள்ளார். அவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
உலகைத் திருத்திய உத்தமர்கள் என்ற பட்டியலில் சாணக்கியன் - சன்யாட்சன் - சாக்ரடிஸ் - முகம்மதுநபிகள் - காரல்மார்க்ஸ் - கரிபால்டி - கலோளர் ஆர். ஜி. இங்கர்சால் ஆகியோரை இணைத்து, அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களை விளக்கமாகத் தந்துள்ளார்.
பல அரிய உண்மைகளையும், சீரிய நிகழ்ச்சிகளையும்,
சிறந்த கொள்கைகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த நூல் எல்லோர்க்கும் பெரிதும் பயன்படுவதாகும்.
நூலே அழகாகவும், நல்ல முறையிலும் வெளியிட்டுள்ள பூம்புகார் வெளியீட்டாளர்களே நான் மிகவும் பாராட்டுகி றேன். அவர்களின் இப்படிப்பட்ட முயற்சிகள் மேலும் மேலும் வளர்வனவாக பலரும் இந்த நூலைப் படித்தறிந்து பயன் பெறுவார்களாக !
சென்னை-1 •) இரா. நெடுஞ்செழியன் 6-4-'79