பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேனா வீரர்கள்

103

தன்னையீன்ற தாய் எந்த வகுப்பைச் சேர்ந்தவள் என்று கவலைப்படாதவன். அவன் மிகப் பயங்கரமான சதி செய்தான் என்றும், குற்றம் செய்தான் என்றும் இராணுவ நீதி மன்றம் விசாரித்து ஒரு பொய் நாடகம் நடத்தியிருக்கிறது என்றால் அதை நிரூபிக்க முடியும். இராணுவ நீதி மன்றம் தீர்ப்புப்படி அவன் செய்திருப்பானானால் டெலில்ஸ் தீவில் விட்டுவிட்டது மாத்திரம் போதாது. தூக்கிலேயே ஏற்றியிருக்க வேண்டும். ஆனால் உண்மை என்ன, அதை நான் அறிய விரும்புகிறேன். நீதியை நிலைநாட்ட விரும்புகிறேன். தாயகத்தின் மேல் தீராப் பழி சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த பெரும் பழியை துடைப்பது தங்கள் மேலான கருணையுள்ளம் அல்லவா. ஆகவே நான் நீதிமன்றத்தில் வாதாட வசதியாக மீண்டும் அதே நீதிமன்றம் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய உத்திரவிடுங்கள். தாங்களன்றி வேறு யாருக்கும் அந்த அதிகாரமில்லை. இதைத்தான் நான் வேண்டுகின்றேன்

அலுவலகம், இங்ஙனம், பிகாரோ, பாரீஸ். தங்கள் கீழ்ப்படிதலுள்ள,

                                        எமிலிஜோலா.


2. இளைஞர்களுக்குக் கடிதம்

எதிர்காலத்தை இந்த நாட்டையாளப் பிறந்த இளைஞர்களே!

உங்கள் நூல்கள், வகுப்பறைகளோடு உங்கள் இளமை ஓடிவிடுவதால் பயனில்லை. எதையும் சாதிக்கவல்ல பருவம். உங்களுக்கென்று திறமை, நீதி, நேர்மை, உறுதி, உயர்ந்த எண்ணங்கள் ஆகியவைகளைத் தேக்கி வைக்கும் பருவம். நமது இராணுவ தளபதி டிரைபஸ். டிரைபஸ் ஒரு யூதனாகப் பிறந்தானாம். அதனாலே அவனுக்குப் பயங்கரத் தண்டனையாம். சொல்லாமல் சொல்லுகிறது நமது இராணுவ நீதிமன்றம். அவனை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளும்போது அவன் யூதன் என்று தெரியவில்லையா. அந்த யூதனிடம் வெடி மருந்துச்சாலைகளின் சாவியைக் கொடுத்திருந்தோமே, அப்