பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

“ஒருவனை ஞானியாக்குவது அப்புறமிருக்கட்டும், முதலில் அவனை மனிதனாக்க முயற்சிப்போமாக!’ என்றார் பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் ரூசோ.

இளமைக் காலந்தொட்டு இந்நாட்டின் நல் வாழ்வுக்காக, மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக, நாடும் மொழியும் மறுமலர்ச்சிப் பெறவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் திரு சி. பி. சிற்றரசு அவர்கள் ஆவார்கள்.

திரு சி. பி. சி. அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; மிகச் சிறந்த பேச் சாளரும் ஆவார். மணிக்கணக்கில் மடை திறந்தாற் போல பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

உலகைத் திருத்திய உத்தமர்கள், உலக மதங்கள், புரட்சி செய்த பேனா வீரர்கள் என்னும் தலைப்புகளில் பல அரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்தக் கட்டுரைகள் நூலாக வெளியிடுவதற்காகவே