இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126
உலக அறிஞர்களின்
49. இரத்தல்
இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர்.
-ஷேக்ஸ்பியர்
உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான்.
-லெஸ்லிங்
இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான்.
- ஹால்
இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது.
-நீட்சே
இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர்.
-ஹேவோர்ட்
★ ★ ★
50. தியாகம்
மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்குமிடமே.
-எம்.ஜே.பாரி
முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி?
-பில்பே