பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

உலக அறிஞர்களின்


49. இரத்தல்

இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர்.

-ஷேக்ஸ்பியர்

உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான்.

-லெஸ்லிங்

இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான்.

- ஹால்

இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது.

-நீட்சே

இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர்.

-ஹேவோர்ட்

★ ★ ★


50. தியாகம்

மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்குமிடமே.

-எம்.ஜே.பாரி

முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி?

-பில்பே