பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29


பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது.

-ஹொரேஸ்

முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான்.

-வாட்ஸ்

முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா.

-கதே

பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது.

-கதே

பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும்.

-ரிக்டர்

முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம்.

-டெனிஸ்ன்

மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை. மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்தியமாகின்றது.

-ஸிட்னி ஸ்மித்

சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை.

-ஸிட்னி ஸ்மித்

★ ★ ★