பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உலக அறிஞர்களின்


தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம்.

-ஸிஸரோ

ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ?

-ரிக்டர்

அநேக சந்தர்ப்பங்களில் நாம் தீமை யென்று கூறுவது, தவறியோ அல்லது மிதமிஞ்சியோ ஏற்பட்ட நன்மையாகும். மனோதைரியம் மிதமிஞ்சினால் மடமையாகும். பட்சம் மிதமிஞ்சினால் பலவீனமாகும். சிக்கனம் மிதமிஞ்சினால் லோபமாகும்.

-ஆவ்பரி

மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.

-பிராங்க்லின்

பையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.

-ஜார்ஜ் எலியட்

அழுகிய பழங்களில் அது கொள்ளுவோம் இது தள்ளுவோம் என்று தேர்வது எப்படி?

-ஷேக்ஸ்பியர்

★ ★ ★


14. அறிவு

'அறிவு'-ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.

-ஷேக்ஸ்பியர்

கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்!

-எமர்ஸன்