இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
71
பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர்.
-கார்லைல்
உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம்.
-எமர்ஸன்
சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல்.
-பர்க்
பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.
சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.
-லாங்பெல்லோ
தமது உயர்வை அறியாதவரே சான்றோர்.
-கார்லைல்
உன்னத லட்சியம் உடைமையும் அதற்காகவே உயிர் வாழ்வதுமே சால்பின் லட்சணம்.
-ஜார்ஜ் லாங்
★ ★ ★
21. கருணை
கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும்.
-ஷேக்ஸ்பியர்