பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உலக அறிஞர்களின்


பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும்.

-கதே

யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.

-எபிக்டெட்டஸ்

அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் 'கோழை' என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.

-பெடிட்-லென்

ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.

-டெனிஸன்

குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும்.

-பால்ரிச்சர்ட்

உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு.

-பப்ளியஸ் ஸைரஸ்

உபகாரத்தைவிட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும்.

-ஆவ்பரி

என்னைப்ப்ற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான்.

-பால் ரிச்சர்ட்