இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
85
வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.
-போப்
நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.
-காஸ்காயின்
நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.
-மூர்
நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.
-கெளலி
உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும்.
-கே
சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.
-வெரிஜில்
★ ★ ★
29. நன்றியறிதல்
நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.
-ஸெனீக்கா
செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும்.
-ரோஷிவக்கல்டு