பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

85


வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.

-போப்

நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.

-காஸ்காயின்

நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.

-மூர்

நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.

-கெளலி

உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும்.

-கே

சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.

-வெரிஜில்

★ ★ ★


29. நன்றியறிதல்

நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.

-ஸெனீக்கா

செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும்.

-ரோஷிவக்கல்டு