பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/. Arquo«. Darf' !: Յ9 - இசை நம்மை உருக்குகின்றது. நமக்கு ஏன் என்று தெரியவில்லை; நாம் கண்ணிர்த் துளிகளைக் காண்கிறோம் ஆனால், அவைகளின் உற்பத்தி நிலையத்தை அறிந்திலோம். அ லான்டள் நான் இசையைக் கேட்டுக்கொண்டே இறக்க வேண்டும். எனக்கு வேறு இன்பம் எதுவும் வேண்டியதில்லை. அ கீட்ஸ் இச்சகம் முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதைவிடக் காகங்க ளிடையே வீழ்ந்து கிடக்கலாம்; அவை பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்களோ உயிருள்ளவர்களையே கொத்து கிறார்கள். அ ஆன்டிஸ்தினிஸ் முகத்துதி செய்வது ஒழுக்கத்திற்குச் சாவுமணி, மனித சமுதாயத்தின் இச்சகம் பேசுபவனே ஆகத் தாழ்ந்தவன். அவனிலும் தாழ்ந்தவன் அவன் பேச்சைக் கேட்பவன். அ எச். மூர் வன விலங்குகளிலே கொடுங்கோலனிடமிருந்தும், பழக்கப் பட்ட விலங்குகளிலே வீண் புகழ்ச்சி பேசுபவனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள். அ பென் ஜான்ஸன் இச்சகம் பேசுவோருடைய தொழில்முறை என்னவென்றால், பெரியோர்களுடைய குறைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடைய தவறுகளைப் _ பெருக்கி வளர்த்தல். அவர்களுக்கு மனம் நோவும்படி யோசனை சொல்லவே மாட்டார்கள். க மோலியர்

இடர் எல்லா மனிதர்களும் தங்களுடைய துயரங்கள் யாவற்றையும் ஒரே இடத்திற்குக் கொண்டுவிந்தால், மற்றவர் துயரங்களைச்