பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 it உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் கொடுங்கோன்மை

  • தீமையான சட்டங்களே கொடுங்கோன்மையில் மிகவும்

இழிவானவை. அ பர்:

  • கொடுங்கோன்மை எப்பொழுதும் பலவீனமானது.

அ ஜே. ஆர். லோவெல்

  • காரணமில்லாமலும் கருத்தில்லாமலும் குடிமக்களின் அபிப் பிராயம் கட்டுப்படுத்தப்பெறுவது ஓரளவு கொடுங் கோன்மையாகும். இது அரசனால் அல்லது பிரபுக்களின் ஆட்சியால் அல்லது தேர்ந்தெடுக்கப்பெற்ற சட்டசபையால் செய்யப்படினும் கொடுமையேயாகும். அ பிளாக்ஸ்டோன்
  • மக்கள் அதை இருக்கவிடுவதால்தான் கொடுங்கோல் ஆட்சி செய்கின்றது. அதன் சக்தியாலன்று. அ ஷேக்ஸ்பியர்
  • அரசன் ஆளவேண்டிய முறைப்படி ஆள்வான் கொடுங் கோலன் தன் விருப்பம் போல் ஆள்வான். அரசன் யாவருடைய நன்மையையும் நாடுவான்; கொடுங்கோலன் சிலருடைய மகிழ்ச்சியையே நாடுவான்.
  • தன் விருப்பத்தைத் தவிர வேறு சட்டத்தை அறியாத அரசன் கொடுங்கோலன். அ வால்டர்
  • சட்டம் முடிவுறும் பொழுது கொடுங்கோல் ஆரம்பமாகின்றது. அ வில்லியம் பிட்
  • கொடுங்கோலரை எதிர்த்துக் கலகம் செய்தல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகும். அ ஃபிராங்க்லின்
  • கொடுங்கோன்மைக்கும் அராஜகத்திற்கும் இடையில் அதிகத் தூரமில்லை. அ ஜே. பெந்தாம்

★ கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லலை செய்தொழுகும் வேந்து. க. திருவள்ளுவர்.