பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ★ Y: ► சமயத்தினால் வரும் இன்பம் மனத்திற்கு ஒரு மந்திரவாதியை போன்றது. அது சதை சம்பந்தமான களிப்பு பயித்தியம் ஆகிய அசுரர்களை ஒட்டிவிடும். ് ിഞ്ഞി, மனிதர்கள் மதத்திற்காகப் பூசலிடுவார்கள். அதைப்பற்றி எழுதுவார்கள். அதற்காகப் போராடுவார்கள். அதற்காக உயிரை விடுவார்கள். அதற்காக வாழ்வதைத் தவிர வேறு எதுவும் செய்வார்கள். அ கோல்டன் இதயத்தில் சமயப்பற்று இல்லாமல் மூளையை மட்டும் விருத்தி செய்துகொள்வது நாகரிகமான அநாகரிகம் மூடி மறைப்பது மிருகத்தனம். அ பன்ஸன் சமயம் உலகில் சிறந்த கவசமாகும். ஆனால், உடைக்கு அது உதாவது உ ஜான் நியூட்டின் சித்தாந்தங்கள் வழியெங்கும் அடர்த்தியாக வளர்ந்து கடவுளை மறைத்துவிடுகின்றன. உ எல். டபுள்யுரீஸ் நான் சமயத்தைப் பெற்றிருக்க விரும்பவில்லை. அதுதான் என்னை ஆட்கொள்ள வேண்டும். க சர்லஸ் கிங்ஸ்லே ஒருவனுடைய ஒழுக்கம் போன பின்பு, அவனுடைய சமயம் தங்கியிராது. அ எலவுத் சமயச் சண்டை சைத்தானுக்கு அறுவடை ஃபாண்டெயின் முக்கியமான விஷயங்களில் சமயத்தை இரண்டாவதாகக் கருதுவது அதைப் பொருட்படுத்துவதாகாது. எவன் கடவுளுக்கு இரண்டாவது இடத்தை அளிக்கிறானோ அவன் இடமே அளிக்காதவனாவான். க. ரஸ்கின் சமயம் தினசரி வாழ்க்கைக்கு உரியது. தொழில் நடத்தும் இடத்திற்கும் ஆலயத்திற்கும் ஒன்று போல உரியதாகும். - = அ பீச்செர்