இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
284 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் பேச்சு 女 எவரையும கையைப் பிடித்து இழுத்து உன் பேச்சைக் கேட்கும்படி நிறுத்தி வைக்காதே ஜனங்கள் உன் பேச்சைக் கேட்க விரும்பவில்லையானால், நீ உன் நாவை அடக்கிக் கொண்டு இருப்பதே நலம். அ செஸ்டர்ஃபீல்டு
- அதிகமாய்ப் பேசுபவர்கள் மிகவும் குறைவாய்ச் சிந்திப்பார்கள்.
பி டிரைடன்
- பேசுபவர்கள் நல்ல செயலாளர்களாக இருப்பதில்லை.
அ ஷேக்ஸ்பியர்
- அதிகமாய்ப் பேசுதல் செருக்கின் அடையாளம் சொற்களை
அள்ளிக் கொட்டுபவன் செயலில் கருமியாயிருப்பான். அ பைர் வால்டர் ராலே
- உலகில் கனைக்கிற கழுதையைப் போலவே, கனைக்கிற மனிதர்களும் இருக்கின்றனர். பொருளில்லாமல் உரக்கக் கத்துவதைக் கனைத்தல் என்றுதானே சொல்ல வேண்டும்!
ைஎல். எஸ்டியேஞ்ச்
- பெரும் பேச்சாளர்கள் ஓட்டைப் பாத்திரங்களைப் போன்றவர்கள்: அவைகளில் ஊற்றியனவெல்லாம் வெளியே போய்விடும். - எலி எலிம்மன்ஸ்
பேரவா
- வறுமையுற்றவர்களுக்குச் சில பொருள்கள் தேவை. ஆடம்பர வாழ்க்கைக்குப் பல பொருள்கள் தேவை. பேரவா கொண்டவர் களுக்கு எல்லாமே தேவை. அ தெளவி
- தங்கம் குவியக் குவியப் பேராசை வளர்ந்துகொண்டேயிருக்கும்.
க ஜூவினால்