பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

103


வன்முறைக் கொடுமைகளும் அவரை வாட்டிக்கொண்டே இருந்தன.

நாசரின் தந்தைக்கோ, மகன் புகழ்பெற்ற ஓர் வழக்குரைஞனாக வேண்டும்; அதனால் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை.

ஆனால், மகனுக்கு அதுவன்று ஆசை. ‘நான் ஒரு வீரன், வீரனுக்குரிய இடம் நீதியின் சன்னிதான்மல்ல’ என்று கூறியபடியே நாசர் ராணுவத்திலே சேர்ந்து பயிற்சி பெற்றார்.

எகிப்து இராணுவம் சீர்கெட்டுப் போய், அடிமைக்கும் சுரண்டலுக்கும் வளைந்து கொடுத்துவிட்டு, சொந்த நாட்டுணர்வே இல்லாத ராணுவக் கூனர்களாக முதுகெலும்பு வளைந்து கிடப்பதைக் கண்டு வருந்தினார்! ராணுவ வீரர்களை அடிமைக் கூலி பெறும் கூலிப்படைகள் என்று வேதனைப்பட்டார் நாசர்.

ஆனால், நாசர் ராணுவத்தில் சேர்ந்தது வயிற்றை வளர்க்கவா? நாட்டின் அடிமைத்தனம் என்ற தளையை அறுத்தெறிய ஒரு நல்லவழி ராணுவம் மூலமாவது பிறக்காதா என்ற விடுதலை வேட்கை ஏக்கம் பெருமூச்சுடன் ராணுவத்தில் சேர்ந்தவர் அல்லவா நாசர்! அதனால், அன்றைய அந்த ராணுவ வீரர்களின் நிலையினைக் கண்டு மனம் உடைந்தார் நாசர்.