பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

உலக வரலாற்றில்



உடனே சர்ச்சில் பிரதமர் நேருவைக் கட்டித் தழுவிக் கொண்டு, ‘மிஸ்டர் நேரு’ இது முகஸ்துதியல்ல; உடனே எனது உள்ளத்தில் உந்திய பேச்சுமல்ல; இதைப் பற்றி நான் மிகவும் சிந்தித்து வைத்திருக்கிறேன். எனது மனப்பூர்வமான ஆசையைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்” என்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் நேர் எதிரியாக இருக்கும் என்று சர்ச்சில் நினைத்தார். ஆனால், இந்தியா இன்றும் காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து ஒரு நட்பு நாடாகவே திகழ்வதற்கு காரணம் பகைபாராட்டாத நேருவின் ஜனநாயகப் பண்பல்லவா? இந்தப் பண்பை சர்ச்சில் சாகும்வரை எண்ணி மகிழ்ச்சியுடன் அன்றே, நேரு எதிரிலேயே கண்ணீர் விட்டார்.

எந்த சர்ச்சில், பெருமகனார் காந்தியடிகளாரைச் சுடு சொற்களால் தாக்கிக் கடுமையாகக் கண்டனம் செய்து பேசினாரோ, அதே சர்ச்சில் பிறகு, காந்தியடிகளைப் பற்றிப் பாராட்டிப் பேசியபோது,

“பகைவரை வெல்லுவதுதான் மிஸ்டர் காந்தியின் நோக்கம் என்று எண்ணினேன். ஆனால், அவர் பகைமையை வென்று என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்திய மகான் என்றார்!