பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

77



பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்ற பல்துறையினரின் ஆதரவை ‘நூ’ பெற்றார். அந்தப் பொதுப்பலம், வெள்ளையர்கள் ஆட்சியை வேரறுக்கும் வேலைகளை ஆங்காங்கே செய்து வந்ததால், பிரிட்டிஷ் அரசு திணறித்திணறி பெருமூச்சுவிட்டபடியே இருந்தது.

இரண்டாவது உலகப்போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரம், ஐப்பானியர்கள் பர்மாவைத் தாக்கி எப்படியும் நாட்டைப் பிடித்துவிட தீவிர திட்டம் இயற்றி படைபலத்தோடு முன்னேறிவந்தார்கள்.

பிரிட்டிஷ் படை திணறிக் கொண்டிருந்ததைக் கண்ட ‘நூ’ பர்மாவுக்கு விடுதலை தருவதாக இருந்தால், ஜப்பான் படைகளை எதிர்த்துப் போரிடுவோம். இல்லாவிட்டால் போருக்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிக்கைவிட்டார்! அரசுக்கும் அறிவித்தார்!

ஆங்கிலேயர் அரசு ‘நூ’ திட்டத்தை ஏற்க மறுத்தது. அதனால் ‘நூ’ அரசுக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று பொதுமக்கள் இடையே பகிரங்கமாக அறை கூவலிட்டார்.

வெள்ளை ஏகாதிபத்தியம் வேடிக்கையா பார்க்கும்? பிடி ‘நூ’ வை; அவரது புரட்சிக்காரர்களை என்று 1940-ம் ஆண்டில் அனைவரையும் கைதுசெய்து கொடுஞ்சிறையில் அடைத்தது!