பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகன் 87 பிரேக் நகரில் அவர் வேல் செய்துவரும்போதுதான் உலகப் புகழ் பெற்ற ஐன்டீனுடைய தொடர்புறவுக் கோட் பாடு பற்றிய இரண்டு வெளியீடுகள் உருவாயின. பிரேக் நகர வாழ்க்கை அவருக்கு பிடித்திருந்தாலும் அவருடைய மனைவி மிலேவர், ஜூரிச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தால் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினர். 1911 ல் பிரஸ்ஸலில் நடைபெற்ற உலக அறிஞர்கள் மகாநாட்டில் அவருடைய ஆராய்ச்சிகள் பாராட்டப்பட்டன. அவர் புகழ் வளர்வதைக் கண்ட ஜெர்மன் அரசாங்கம், அவரை மீண்டும் ஜெர்மன் குடியுரிமையை ஏற்குமாறு வேண்டியது; அதை ஏற்றர். 1983 ம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த பரிசான நோபெல் பரிசு அவருக்குக் கிடைத்தது. 1939ல் அவர் தம் ஐம்பதாவது பிறந்த நாளே ஆரவாரமில்லாமல் கழிக்க எண்ணி, யாருக்கும் தெரியாமல் ஒரு கிராமத்திற்குச் சென்று கழித்துத் திரும்பினர். நண்பர்கள் வாழ்த்துக்கள் மலேபோல் குவிந் திருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். 1933 ல், ஜெர்மனி ஹிட்லரின் கொடுங்கோல் ஆதிக்கத்தின்கீழ் வந்ததும், அங்கேயிருக்கப் பிடிக்காமல் அமெரிக்கா சென்று குடி யேறினர். ஐன்ஸ்டீனுடைய சொத்துக்களை .ெ ஜ ர் ம ன் அரசாங்கம் கைப்பற்றியதோடு, தேசப்பற்றற்ற துரோகி என்ற பட்டத்தையும் தந்து, பிரஷ்யக் கலக்கூட உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியதாக அறிவித்தது. அமெரிக்கா அவருடைய அறிவைத் தக்க முறையில் பயன்படுத்தி, அறிவியல் துறையில் அதிவேகமாக வளர்ச்சி யடைந்ததை நாம் அறிவோம். அவர் கண்டுபிடித்த அணு சக்தி, அழிவிற்குப் பயன் படுவதை அவர் அறவே வெறுத்தார். இயற்கையிலேயே இளகிய மனமும், இரக்க சிந்தையும் கொண்ட ஐன்ஸ்டின், உலகில் அமைதி நிலவ வேண்டுமென்று ஒரு அமைப்பையே நிறுவினர். அறிவுலகத்திற்கு வருங்கால சமுதாயம் போற்றும்