பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமையும் இன்னலும்

25

 

கள்ளிப் பெட்டி அலமாரியிற் சேர்த்து வைத்து, அதனையே தமது புத்தக நிலையம் என்பாராயினார். பள்ளிக்குப் போய்வந்த பிறகு வீட்டிலும் ஒர் ஆசிரியர் இரவில் வந்து சொல்லிக்கொடுக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டார். இச்செயல்களிலெல்லாம் எசமாட்டியின் ஆதரவை அவர் பெற்றே இருந்தார். அவ்வளவுக்குங் காரணம், அவர்தம் உழைப்பும் உற்சாகமும் நேர்மையுமே ஆகும்.