பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

பணத்தை அனுப்பியிருந்தார்கள். ஆசிரியர் ஒருவரும் சிறிது உதவினார். அதனால், புக்கர் மால்டன் என்ற ஊரைச்சேர்ந்து தாயையுஞ் சகோதரர்களையுங் கண்டு அங்கே தங்க முடிந்தது. அவர் இரண்டாண்டிற் பெற்றிருந்த கல்வியைக் காணவே, அவர்களது மகிழ்ச்சி பொங்கிற்று. அவ்வூர் நீகிரோ மக்கள் அனைவரும் உவகை எய்தினர். அவர்தம் வீடுதோறும் புக்கருக்கு விருந்து நிகழ்ந்தது. அவ்விருந்துகளில், ஹேம்புடன் பள்ளியின் மேன்மையைப் புக்கர் எடுத்துரைக்க வேண்டியவராய் இருந்தார். இதற்கிடையில் பணம் தேட வேண்டுமே என்ற எண்ணம் புக்கருக்கு எழாமல் எப்படி இருக்கும் ? விடுமுறை முடிந்ததும் ஹேம்புடன் சேர்வதற்கு வேண்டிய பணத்தை ஒருவரும் அவருக்குக் கொடுத்திருக்கவில்லையே! அவர் வேலையை நாடியும், விடுமுறையில் ஒருமாதம் ஆகியும் வேலை வாய்க்கவில்லை. வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த அவர், மேலே நடக்க மாட்டாதவராய், வழியில் வறிதாய் இருந்த தொரு மனையில் அயர்ந்தார். அந்நேரமோ இரவு. காலையிலோ அவருக்கு ஓர் இழவுச் செய்தி வந்தது, அவர்தம் அருமைத்தாய் அகன்றுவிட்டாள் என்ற செய்தியைச் சகோதரர் ஜான் (John) அறிவித்தார். இந்தக் கணமே அவரது வாழ்க்கையின் மிக்க துக்கக் காலமாயிருந்தது. முன்னாள் தாயைவிட்டுப் பிரிந்த காலையில், மறுநாள் தம் தாயை உயிருடன் காண முடியாது