பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உழைப்பால் உயர்ந்த ஒருவர்


புக்கர் செல்வரடஞ் சென்று இரந்தார் அல்லர். அவர்மாட்டுச் சென்று டஸ்கிகீயிற் செய்யப்படுந் தொண்டினை எடுத்துக்கூறி அவர் உதவ ஒரு வாய்ப்புத் தந்து வந்தாரேயன்றி, 'ஈமின்' என இரந்தாரல்லர், வீடுதோறுஞ்சென்று அவர் நாடிய வகையில், மக்களுட் சிறந்தார் சிலரைக் காண அவருக்குச் சமயம் வாய்த்தது. பாஸ்டனில், அவர் செல்வர் ஒருவரைக்கண்டு பேசினார். அவர் தமது கடமையைப் புக்கரே செய்வதற்கான நன்றி கூறி, மனமுவந்து மாநிதியம் அளித்தார். அதற்கு முன்னால், புக்கராற்பார்க்கப்பட்ட சீமாட்டியின் கணவனார் சீறி விழுந்து நாய்போலக் குரைத்து "அனுப்பினார். உலகம் இவ்விரு திறத்தாரையும் உடைத்து. எனினும், அமெரிக்காவில் முன்னவர் போன்றவர் தொகை நிரம்பிக்கொண்டும் பின்னவர் போன்றவர் தொகை குறைந்துகொண்டும் வருவதாகவே சொல்லப்படு கின்றது.

ஒருவரிடஞ்சென்றக்கால் ஒன்று கொடாவிடில், அவரை இகழலாகாது என்று கருதியவர் புக்கர். அவரே பல வேளைகளில் முதற்கண் ஒன்றுங் கொடுக்காதவரிடமிருந்தும் சிறிதளவே கொடுத்தவரிடமிருந்தும் பின்னால் பெருநிதிகள் பெற்றிருக்கிறார். முதலில் ஒரு காசுங் கொடுக்காத செல்வர் ஒருவர், டஸ்கிகீத் தொண்டினை அறிந்துகொள்ள அது முதல் முயல்வாரா-