பக்கம்:ஊசிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 சரண்



ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்......
     காட்டில் மலையில்
     கண்படாதிருந்த
     இரவுக் கொள்ளையர்
     இதயம் வெளுத்துச்
     சரணடைந்தார்களாம்
     சபதம் செய்தார்களாம்

ம.பி. முதல்வர் -
மகிழ்ச்சி அடைகிறார்......

அது சரி,

    நாட்டில் தெருவில்
    நடமாடு கின்ற
    பாக்கியுள்ள
    பகற்கொள்ளையர்கள்
    என்றைக்குச்சரண்
    அடைய எண்ணமாம்!

'ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்.
மக்கள் எப்போது
மகிழ்ச்சி அடைவதாம்?

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/48&oldid=1013582" இலிருந்து மீள்விக்கப்பட்டது