பக்கம்:ஊசிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ரகுமான்: ஏதாவது எடுத்துக் காட்டிச் சொல்லேன்.
பாலு: 'வீரமும் விவேகமும் என்ற கவிதையில் 'பாரத மக்கள் அமெரிக்கன்ரிப்போர்ட்டரை இலவசமாக வாங்கிக் கடையில் நிறுத்துப் போட்டு அந்தப் பணத்தில்.சோவியத்நாடு: சந்தா கட்டுவதாகச் சொல்லுகிற இடம். இங்கே இலக்கியத் தன்மையைவிட ஒரு 'பற்றுதான் முன்நின்று முகம் நீட்டுகிறது. அப்படி ஒரு பற்று இருப்பது இலக்கியத் துக்குப் புறம்பானது என்று கூறவில்லை. அந்தச்சார்பு இல்லாதவனும் அடடா என்று பாராட்டும்படியாக அது சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அது இலக்கியம் ஆகும். இங்கே ஒரு பிரச்சாரத்தைக் கிண்டல் செய்கிறவன் இன்னொரு பிரச்சாரத்தைப் பற்றினால் ஆதரிப்பதாகத்தான் படுகிறது. இந்தப் பற்று மயக்கத்தில் இந்தியரின் விவே கத்தைப் பாராட்டி எழுத வந்தவன் தன்னை யும் அறியாமல் கேலி செய்திருக்கிறான்.
மீரா: ஆமாம்; அதுவும் என் நோக்கந்தான் 'சோவியத் நாடு வாங்குவதோடு நம்மவர்களின் ஆசைநின்று போகிறது. இதற்குமேல் பொதுவுடைமைப் பாதையில் நம்மவர்களால் நடக்க முடியாத பலவீனத்தைக் குத்திக்காட்டத்தானே வேண்டும்.
பாலு: அப்படியென்றால் சரி; இருந்தாலும் உன் 'கனவுகள் கற்பனைகள் காகிதங்களில் உன் ஆன்மா அள்ளி அணைக்க விரும்பும் பேரழகைப்
"புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளை-
"



6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/8&oldid=978622" இலிருந்து மீள்விக்கப்பட்டது